search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் பிணம்"

    • யார்?அவர் போலீசார் விசாரணை
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    குளச்சல் :

    குளச்சல் இரும்பிலியில் யாமான் குளம் உள்ளது. கடந்த பல நாட்களாக இந்த குளம் பாசிப்படர்ந்து பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக சென்றவர்கள், குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கவிழ்ந்த நிலையில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இறந்து கிடந்த நபர் லுங்கியும், முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து 2 நாட்களுக்கு மேலாகும் என கூறப்படுகிறது. இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் ஷீலா ஆகியோர் சம்பவம் இடம் சென்று பார்வை யிட்டனர். குளச்சல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரும்பிலி யாமான் குளத்தில் பி ணமாக மிதந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரும்பிலியாமான் குளத்தில் ஆண் பிணம் மிதந்து கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 8-ந்தேதிக்கு பிறகு கருணாகரனை காணவில்லை.

    இரணியல், நவ.11-

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 46). திங்கள்நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கருணாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி, குழந்தைகள் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். கருணாகரன் மட்டும் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ் மாடியில் அவரது அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதிக்கு பிறகு கருணாகரனை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் நேற்று இரவு மாடிக்கு சென்று கதவை தட்டி கருணாகரனை அழைத்துள்ளார். கதவு திறக்காததால் கதவை தள்ளி திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கருணாகரன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் இருந்து லேசாக துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் கருணாகரன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கருணாகரன் மனைவி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாலை சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து திம்மரசநாயக்கனூர் பிட்-2 வி.ஏ.ஓ. தேவி ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலியானது தெரிய வந்துள்ளது.

    • காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து கிடந்த நபர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், மஞ்சள் நிறத்திலான சட்டை அணிந்திருந்தார். அவரது கையில் மஞ்சள் நிற கயிறும், வலது கையில் பச்சை, வெள்ளை கலந்த நிறத்திலான மோதிரம் அணிந்திருந்தார்.

    • மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.

    தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார், வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டரா? என விசாரித்து வருகின்றனர்.

    • கந்தர்வக்கோட்டை அருகேமுந்திரி காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
    • கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

     கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை கிராமத்தில் அற்புதபுரம் பெரியசாமிக்கு சொந்தமான முந்திரி காட்டில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து சென்ற கந்தர்வ கோட்டை போலீ சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மஞ்ச ப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
    • மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த காரணாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையை நோக்கி சம்பத்தன்று காலை 10 மணிக்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.

    பின்னர் நிழற்குடையின் பின்புறம் உள்ள திட்டில் அவர் படுத்திருந்துள்ளார். பின்னர் அவர் இறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நிலையிலும், வலது கை மணிக்கட்டில் சிவப்பு கயிறு அணிந்தும், கருப்பு கலர் சட்டையும், பச்சை கலரில் வேட்டியும் அணிந்திருந்தார். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
    • அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகத்துக்குட் பட்ட எண்ணமங்கலம், கோவிலூர், புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரது பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறைக்கும் ,பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை யினர், சிறப்பு போலீஸ் சப்- இனஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற னர்.

    அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும். இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.

    மேலும் அவர் யார் மற்று ம் எந்த பகுதியை சேர்ந்தவர் அவர் எப்படி அந்த பகுதிக்கு வந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் சரகம், தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் முடி வெட்டி முகவரம் செய்திருந்த நிலையில் இருந்தார்.

    இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காணப்படவில்லை உடலில் காயம் எதுவும் இல்லாததால் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் இறநதவரின் உடல் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாரமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென மாயமானார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லியை சேர்ந்தவர் உமாபதி (வயது 55). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    இவரது மனைவிகள் இருவரும் பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில், கடந்த 7 மாதங் களாக குடியாத்தம் அருகே உள்ள பக்கிரிபல்லியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். மேலும், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் இவர் திடீரென மாயமானார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் உமாபதி இறந்த நிலையில் பிணமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உமாபதி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×